யாழ்.பருத்தித்துறை நகர சபையின் அலட்சிய போக்கால் ஏற்பட்ட அசம்பாவிதம்
யாழில் (Jaffna) தண்ணீர் வண்டியின் சக்கரம் புறமாகவும் தண்ணீர் வண்டி புறமாகவும் தடம் புரண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் அலட்சிய போக்கால் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (27) காலை 11:30 மணியளவில் பருத்தித்துறை யாழ்ப்பாணம் 751 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
[7WYUAMH ]
நகர சபை
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை நகர சபைக்கு சொந்தமான தண்ணீர் வண்டியானது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதற்காக புறப்பட்டுள்ளது.
அந்த வண்டி பருத்தித்துறை யாழ்ப்பாணம் 751 பிரதான வீதி வழியாக செல்லும் போது சக்கரம் முன்பாகவும் வண்டி புறமாகவும் சென்றுள்ளது.
அசம்பாவிதம்
அந்த நேரம் அந்த வீதி வழியாக மக்கள் பயணிக்காததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர சபையின் இவ்வாறான அலட்சிய போக்கை உடனடியாக நிறுத்தி அதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை நகர சபை தவிசாளர் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




