றீ(ச்)ஷாவில் காய்த்துக் குலுங்கும் கொடித்தோடை(காணொளி)
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திபெற்ற பசுமை பண்ணையாக றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ( ReeCha Organic Farm) காணப்படுகின்றது.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பண்ணையில் விவசாய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், றீ(ச்)ஷா பண்ணையில் வெளிநாடுகளில் பிரசித்திபெற்ற கொடித்தோடை காய்த்துக் குலுங்குகின்றது.
இவை முழுவதுமாக இயற்கையான உரங்களை பயன்படுத்தியே வளர்க்கப்படுகின்றது.
இந்தக் கொடித்தோடைகளின் மூலம் றீ(ச்)ஷாவிற்கு வரும் விருந்தினர்களுக்கு குளிர்பானங்கள் செய்து கொடுக்கப்படுகின்றது.
மேலும் அன்னாசி, தர்பூசணி போன்ற பழ பயிர்செய்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணைக்கு வருகை தருபவர்கள் இவற்றையும், வந்து பார்வையிட முடியும்.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் காணொளியில்,
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்