அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தை! பாகிஸ்தானுக்கு செல்லவுள்ள ஈரானிய தூதுக்குழு
இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஒரு சிறிய தூதுக்குழுவுடன் பாக்கிஸ்தானுக்கு செல்லவுள்ளார்.
குறித்த தூதுக்குழுவுடன் இன்று இரவு பாகிஸ்தான் தலைநகருக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அராக்சிக்கும் பாகிஸ்தான் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற தொடர்ச்சியான தொலைபேசி உரையாடல்களைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள மூத்த அரசாங்க அதிகாரிகள் இந்த முன்னேற்றத்தை உறுதிப்படுத்தியள்ளனர்.
பாகிஸ்தான் பயணம்
தற்போது அராக்சியின் பாகிஸ்தான் பயணம் அமெரிக்காவுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அல்ல, மாறாக பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேசுவதற்காகவே இருதரப்பு ரீதியானது என்று ஈரானிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்திற்குப் பிறகு அராக்சி மாஸ்கோ மற்றும் மஸ்கட்டிற்குப் பயணம் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஹோர்முஸ் நீரிணையிர் பல நாட்களாக அதிகரித்து வந்த மோதல் போக்கிற்கும் பதற்றத்திற்கும் பிறகு, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு "முன்னேற்றம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இப்போது இருப்பதாக ஒரு பாகிஸ்தான் அதிகாரி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்