ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் பஹ்லவி மீது தக்காளி வீசி தாக்குதல்
ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி மீது தக்காளி கெட்ச்அப்(புளிப்பு சுவையூட்டி) வீசப்படும் காணொளி ஒன்றை ஈரானிய அரசு ஊடக நிறுவனம் பகிர்ந்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட 47 வினாடி காணொளி ஒன்றில், ஜெர்மனியின் பெர்லினில் ஒரு கட்டிடத்திலிருந்து பஹ்லவி வெளியே வந்தபோது, ஒருவர் அவர் முதுகில் சிவப்பு நிற திரவத்தை வீசித் தாக்கும் சம்பவம் காட்டப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்காக சைப்ரஸில் ஐரோப்பியத் தலைவர்கள் கூடத் தயாரான நிலையில், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளைக் கைவிடுமாறு ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸிடம் பஹ்லவி அழைப்பு விடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
JUST IN: 🇮🇷🇩🇪 Demonstrator threw paint on Iranian Exiled Crown Prince Reza Pahlavi in Berlin, Germany today. pic.twitter.com/pHoXmg5oW1
— BRICS News (@BRICSinfo) April 23, 2026
ஈரான் ஆட்சி
ஈரானில் உள்ள ஆட்சியின் மீது மேலும் அழுத்தம் கொடுக்குமாறு அவர் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “ஐரோப்பா செய்யக்கூடிய பல காரியங்கள் இருக்கின்றன, ஆனால் அது இன்னும் செய்யவில்லை. மரணதண்டனைகளை நிறுத்துமாறு ஆட்சிக்கு அழுத்தம் கொடுத்து எதுவும் செய்யப்படவில்லை.
அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தவும் எதுவும் செய்யப்படவில்லை. தங்கள் சுதந்திரத்திற்காகத் தொடர்ந்து போராடும் ஈரானியர்களின் குரலாக இருப்பதற்காக பெர்லினுக்கு வருகின்றேன்” என ரெசா பஹ்லவி கூறியுள்ளார்.
ஊடகங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்துவது, ஈரானியப் புலம்பெயர்ந்தோரைச் சந்திப்பது மற்றும் ஜெர்மன் நாடாளுமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது ஆகியவை குறித்தும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்