யாழில் வீதி விபத்தில் பலியான பாதசாரி
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
நெடுந்தீவு பிரதான வீதி இலங்கை வங்கி கிளை அருகே இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த பரணாந்து சகாயதேவதாஸ்(வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வேகமாக வந்த முச்சக்கரவண்டி வீதியினை கடக்க முற்பட்டவரை மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு,வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை முச்சக்கரவண்டி சாரதி நெடுந்தீவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்