போராட்டம் செய்யும் உரிமை மக்களுக்கு உண்டு! அமெரிக்க தூதுவர் வலியுறுத்தல்
இலங்கை மக்களுக்கு போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜூலி சுங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை மக்களிற்கு போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது.
இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது, நான் நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கின்றேன், எதிர்வரும் நாட்கள் அனைத்து தரப்பினருக்கும் பொறுமையை கொண்டுவரும் என கருதுகின்றேன்.
துயரத்தில் சிக்கியுள்ளவர்களிற்கு மிகவும் அவசியமான பொருளாதார ஸ்திரதன்மையும் நிவாரணத்தையும் கொண்டுவரும் என எதிர்பார்க்கின்றேன் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Sri Lankans have a right to protest peacefully - essential for democratic expression. I am watching the situation closely, and hope the coming days bring restraint from all sides, as well as much needed economic stability and relief for those suffering.
— Ambassador Julie Chung (@USAmbSL) April 2, 2022