அதிகரிக்கும் பாரிய குற்ற செயல்கள்: காவல்துறையினருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
பாரிய குற்ற அலைகள்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் பாரிய குற்ற செயல்கள் உருவாகியுள்ளதாக முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இத்தகைய நெருக்கடியை கையாள போதுமான காவல்துறை அதிகாரிகள் இருந்தாலும், உயரடுக்கு பாதுகாப்பு கடமைகளுக்காக பலர் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரை தாக்கும் வாய்ப்பு
தோற்கடிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்தார்.
காவல்துறை அதிகாரிகள் சாதாரண மக்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது தற்காப்புக்காக காவல்துறையினரை தாக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
