மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரச உத்தியோகத்தர்கள்: வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு

Jaffna Northern Province of Sri Lanka P. S. M. Charles
By Laksi Jul 09, 2024 06:02 PM GMT
Report

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரச உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P. S. M. Charles) தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை தொண்டைமானாறு சித்த மத்திய மருந்தக திறப்பு விழாவில் இன்று (9) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிகழ்வின் போது ஆளுநர் மேலும் உரையாற்றுகையில், “மக்களின் நீண்டகால தேவையாக காணப்பட்ட ஆயுர்வேத சித்த மருந்தகம் இன்று திறக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடு விவகாரம்: ரணிலை குற்றஞ்சாட்டும் ஆசிரியர் சங்கம்

சம்பள முரண்பாடு விவகாரம்: ரணிலை குற்றஞ்சாட்டும் ஆசிரியர் சங்கம்

வரலாற்று சிறப்பு பகுதி

இதனூடாக இந்த பகுதி மக்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என நம்புகின்றேன். இந்த கட்டடத்தை நிர்மாணிக்க மக்களாக முன்வந்து தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டுள்ளமை வடக்கு மாகாணத்திற்கே சிறந்த முன்னுதாரணமான செயற்பாடாகும்.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரச உத்தியோகத்தர்கள்: வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு | People Need Government Officials Np Governer

ஏற்கனவே இங்கு மூன்று துறைமுகங்கள் காணப்பட்டதாக அறியக் கிடைக்கின்றது. தற்போதுள்ள துறைமுகம் பிற்பட்ட காலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள சுங்க அலுவலகத்தை புனரமைக்க நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆகவே இதனூடாக மேற்கூறிய கருத்தை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். எனவே வரலாற்று சிறப்பு பகுதியில் வாழ்கின்றோம் என்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது.

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: நாடாளுமன்றில் கஜேந்திரன் எம்.பி விடுத்த கோரிக்கை

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: நாடாளுமன்றில் கஜேந்திரன் எம்.பி விடுத்த கோரிக்கை

வடக்கு மாகாண சுகாதாரத்துறை 

இதேவேளை, இந்த மண்ணின் பெருமைக்குரிய குடும்பத்தினரின் உதவியோடு இந்த வைத்தியசாலை திறந்து வைக்கப்படுகின்றது. மக்கள் அரச உத்தியோகத்தர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். மக்களுக்காகவே அரச சேவை முன்னெடுக்கப்படுகின்றது.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரச உத்தியோகத்தர்கள்: வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு | People Need Government Officials Np Governer

அதற்கமைய, மக்களிடமிருந்து விலகி நிற்க ஒருபோதும் நாங்கள் நினைத்ததில்லை. வைத்திய நிபுணர்களின் வெளியேற்றத்தால் வடக்கு மாகாண சுகாதாரத்துறை பாரிய சவாலுக்கு மத்தியில் செயற்பட்டு வருகின்றது. தாதியர் பயிற்சிகளுக்கு எமது பகுதிகளில் இருந்து ஒருவரும் செல்வதில்லை.

இந்தநிலையில், வைத்தியசாலைகளில் வெளி மாகாணங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பணியாற்றுகின்றனர். அவர்களில் பலர் தமது கவலை நிலைகளை தெரிவித்து தினமும் என்னை சந்திக்க வருகின்றனர்.

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் பிரதம குரு இயற்கை எய்தினார்

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் பிரதம குரு இயற்கை எய்தினார்

உரிய தீர்வு

எனினும் மாகாணத்தின் அரச சேவையை உறுதிப்படுத்துவதற்காக அவர்களின் குரலுக்கு செவிசாய்க்காது திருப்பி அனுப்பிய சந்தர்ப்பங்களே அதிகம்.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரச உத்தியோகத்தர்கள்: வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு | People Need Government Officials Np Governer

வடக்கு மாகாணத்தில் 138 வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றது. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு சுகாதார அமைச்சிடம் ஆளணி இல்லை. இவ்வாறான பல சவால்களுக்கு மத்தியிலேயே எமது சுகாதாரத்துறை இயங்குகின்றது.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே அரச உத்தியோகத்தர்கள் சேவையாற்றுகின்றனர். ஏதேனும் சேவைகள் உரிய முறையில் கிடைக்காவிடின் எங்களை சந்தித்து அவற்றிற்கான உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள்.” என தெரிவித்தார்.

முல்லைத்தீவில் தும்பு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

முல்லைத்தீவில் தும்பு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026