அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்த மக்கள்...! மீண்டும் ராஜபக்சர்கள் ஆட்சி
மீண்டும் ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளனர் என்று பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்றைய தினம் (03-09-2026) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வந்து இழைத்த தவறை திருத்துவதற்கு தயாராகியுள்ளனர்.
மக்கள் முடிவு
இதன்படி, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்க மக்கள் முடிவு செய்துள்ள நிலையில் அதனை தடுப்பதற்கு இந்த அரசாஙக்ம் பல சதிகளை செய்து வருகின்றது.

நடைமுறைக்குச் சாத்தியமற்ற பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
எனினும் மக்கள் இதனை தற்போது புரிந்து கொண்டுள்ளனர் அத்தோடு அரசாங்த்தின் மீதும் ஆட்சியாளர்களின் மீதும் மக்களுக்கு இப்போது நம்பிக்கைக் கிடையாது.
ஜனாதிபதித் தேர்தல்
மக்கள் இழைத்த தவறை சரிசெய்யும் பொருட்டு ராஜபக்சர்களின் ஆட்சியை மீளக் கட்டியெழுப்ப மக்கள் தயாராகியுள்ளனர்.

2029 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள்.
இதனால் நாமல் ராஜபக்சவை எந்த வழியிலாவது நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18