அதிபர் தேர்தல் குறித்து மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் : வஜிர அபேவர்த்தன சுட்டிக்காட்டு

Ranil Wickremesinghe Sri Lanka Vajira Abeywardena Election
By Sathangani Dec 29, 2023 05:12 AM GMT
Report

அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட பேரழிவு மீண்டும் தங்களின் எதிர்கால பிள்ளைகள் அனுபவிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தல் இடம்பெறும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் காலி மாவட்ட கட்சி காரியாலயத்தில் நேற்று  (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்தியப் பெருங்கடலில் மீண்டுமொரு நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் மீண்டுமொரு நிலநடுக்கம்


ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார்

''பல வருடங்களுக்குப் பின்னர் எமது நாட்டு கிறிஸ்தவ மக்கள் இந்த முறை நத்தார் தினத்தைக் கொண்டாட முடியுமாகி இருந்தது. கடந்த 3 வருடங்களாக பொருளாதார நெருக்கடி, உலகில் ஏற்பட்ட தொற்று நோய் நிலைமைகள் காரணமாக எமது நாட்டு மக்கள் மிகவும் அழுத்தத்துடனே இருந்தார்கள்.

ரணில் விக்ரமசிங்க Ranil Wickremesinghe சிறிலங்கா அதிபர் Sri lanka President

சிங்கள, தமிழ், கிறிஸ்தவ மக்களுக்கு தங்களின் மத நிகழ்வுகளை அனுஷ்டிக்க முடியாத நிலை இருந்தது. இந்த அழுத்தம் இறுதியில் நாங்கள் வங்குராேத்து தேசமாக மாறினோம். அத்துடன் வங்குராேத்து அடைந்த இந்த நாட்டை பொறுப்பேற்க யாரும் இல்லாத சந்தர்ப்பத்திலேயே ரணில் விக்ரமசிங்க இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

எப்படியாவது ஒருவருடமும் 6மாதங்கள் ஆகும்போது இந்த வங்குராேத்து நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு முடியுமாகியுள்ளது. இதன் காரணமாக எமது வியாபாரிகளின் கடன் நாணய கடிதம் உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் நாணய கடிதமாக மாறியுள்ளது.

அத்துடன் 2024 ஜனவரியாகும்போது எமக்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெக்கா நிறுவனம் உள்ளிட்ட எமக்கு நன்கொடை வழங்கிய மற்றும் கடன் வழங்கிய குழுவினர் நிறுத்தியிருந்த அபிருத்தி வேலைத்திட்டங்கள் மீண்டும் இலங்கைக்குள் ஆரம்பிக்க இருக்கின்றன.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! அடுத்த ஆண்டு முதல் குறைவடையப்போகும் மின்கட்டணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! அடுத்த ஆண்டு முதல் குறைவடையப்போகும் மின்கட்டணம்


உலக தலைவர்களின் கவனம் 

இவ்வாறான நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தற்போது பிரதான விடயமாக இருப்பது அதிபர் தேர்தலை எப்போது நடத்துவது என்பதாகும். அதேநேரம் அதிபர் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கப்போவதாக பலரும் தெரிவித்திருக்கின்றனர். எவ்வாறு இருந்தாலும் இலங்கை மக்கள் இதுதொடர்பாக மிகவும் சிந்தித்து செயற்பட வேண்டி இருக்கிறது.

இங்கிலாந்து பிரதமர் England PM சீன அதிபர் China President அமெரிக்க அதிபர் America President

அத்துடன் அதிபர் தேர்தலுக்கு முன்வந்திருக்கும் வேட்பாளர்களுக்கு நாடொன்றை நிர்வகிக்க முடியுமா அல்லது இந்த வேட்பாளர்களுக்கு உலக தலைவர்களை சமாளித்துக்கொண்டு இலங்கையை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியுமா என்பதை மக்கள் நன்கு சிந்தித்து பார்க்க வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க கடந்த ஒருவருடம் 6 மாதங்களுக்குள் அமெரிக்க அதிபர், சீன அதிபர், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் இந்திய பிரதமர் உள்ளிட்ட உலகில் பிரதான தலைவர்களின் கவனத்தை இலங்கையின்பால் செலுத்தியே இலங்கையை வங்குராேத்து நிலையில் இருந்து மீட்டு, முன்னோக்கி கொண்டுசெல்கிறார்.

உலகில் பல நாடுகள் வங்குராேத்து நிலையில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில் இருக்கும்போது ரணில் விக்ரமசிங்க தனது அனுபவம் மற்றும் ஆளுமை காரணமாக எமது நாட்டை வங்குராேத்து நிலையில் இருந்து மீட்டிருக்கிறார்.

விஜயகாந்தின் உடல் அரச மரியாதையுடன் இன்று நல்லடக்கம்(நேரலை)

விஜயகாந்தின் உடல் அரச மரியாதையுடன் இன்று நல்லடக்கம்(நேரலை)


மீண்டும் வரிசை யுகம் 

மேலும் அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் ஒருவரை தெரிவு செய்துகொள்வதற்கான தேர்தல், பதவியில் இருக்கும் அதிபரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாத காலத்துக்கு குறையாத மற்றும் இரண்டு மாதங்களைவிட அதிகரிக்காத கால வரையறைக்குள் இடம்பெற வேண்டும்.

fuel shortage in sri lanka

அப்படியானால் தற்போது இருக்கும் அதிபர் போட்டியிடுவதாக இருந்தால், தான் போட்டியிடுவதாக தெரிவிக்க வேண்டும். அதன்போது அதிபர் தேர்தல் இடம்பெறும். அவ்வாறு இல்லாவிட்டால் தேர்தல் ஆணையாளரின் கடமையை செய்ய வேண்டி ஏற்படுகிறது.

அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி நாட்டு அதிபர் செயற்பட முடியாது. என்றாலும் நாங்கள் மீண்டும் எரிபொருள் வரிசைக்கு, எரிவாயு வரிசைக்கு செல்வதா நாட்டை வீழ்ச்சியடையச் செய்வதா அவ்வாறு இல்லாவிட்டால் தற்போது மேற்கொண்டிருக்கும் தேசிய கொள்கை கட்டமைப்பை அடுத்துவரும் 12 வருடங்களுக்காவது தொடர்ந்து மேற்கொள்ள தேவையான நடவடிக்கையை எடுக்கிறதா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்'' என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வதிரி, அம்பாந்தோட்டை, Oslo, Norway, London, United Kingdom, Sutton, United Kingdom

31 May, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு, கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

06 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024