விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பல்கலை மாணவி - பெற்றோர் எடுத்த தீர்மானம்
University of Peradeniya
Sri Lanka
Accident
By pavan
பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
23 வயதுடைய சச்சினி கலப்பத்தி என்ற மாணவியே உயிரிழந்த நிலையில் அவரது கண் உட்பட உடற்பாகங்களை பேராதனை வைத்தியசாலைக்கு தானமாக வழங்க பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த 1 ஆம் திகதி குறித்த மாணவியும் அவரது இரண்டு நண்பிகளும் ஹில்டா ஒபேசேகர விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகினர்.
இறுதிக் கிரியை
இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த யுவதி தங்காலை பெண்கள் கல்லூரியின் பழைய மாணவி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் கடந்த வெள்ளிக்கிழமை தங்காலை பொது மயானத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்