வடக்கு, கிழக்கில் நிறைவடையாத அரச வீட்டுத் திட்டங்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூர்த்தி செய்யப்படாத அரச வீட்டு திட்டங்கள் குறித்து அரசாங்கம் ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் துறை பிரதி அமைச்சர் டி.பி. சரத், முந்தைய திட்டங்களின் கீழ் சுமார் 6,000 வீடுகளின் கட்டுமானம் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
எனினும், அந்த வீடுகளில் பலவற்றின் கட்டுமானப் பணிகள் ஆரம்பக் கட்டத்திலேயே கைவிடப்பட்டதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பிரதி அமைச்சர் தெரிவிப்பு
இந்த நிலையில் முடங்கியுள்ள இந்தத் திட்டங்களை முடிந்தவரை விரைவாக முடித்து, பயனாளிகளுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வீட்டுத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |