எரிபொருளை இறக்குமதி செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அனுமதி
அமைச்சரவை அனுமதி
எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை தவிர்ப்பதற்கு அரசு பல வழிகளிலும் முயற்சித்தது வரும் நிலையிலேயே கஞ்சன விஜேசேகர முன்வைத்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1) Cabinet Approval was granted to open up the Fuel Import and Retail sales market to Companies from Oil producing Nations. They will be selected on the ability to Import Fuel and operate without Forex requirements from the CBSL and Banks for the first few months of operations.
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 28, 2022
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் கலாநிதி சமன் வீரசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர நேற்று திங்கட்கிழமை கட்டார் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.