பாக்கு நீரிணை மணல் திட்டுக்களை பார்வையிட கிடைத்தது அனுமதி
தலைமன்னார் மற்றும் இந்தியாவை(india) பிரிக்கும் பாக்கு நீரிணை பகுதியில் காணப்படும் இலங்கைக்கு சொந்தமான 6 மணல் திட்டுக்களை பார்வையிடுவதற்கான அனுமதி நீண்டகாலங்களாக மறுக்கப்பட்ட நிலையில் சுற்றுலா துறையை விருத்தி செய்யும் முகமாக குறித்த மணல் திட்டுக்களை பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சின் ஊடாக(ministry of defence) கிடைக்கப் பெற்றுள்ளதாக மன்னார்(mannar) மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரையான தாமதத்திற்கு காரணம்
படகு போக்குவரத்து செய்யக் கூடிய முதலீட்டாளர்களை பெற்றுக் கொள்வதில் காணப்பட்ட தாமதம், வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனுமதி காரணமாக குறித்த விடயம் தாமதிக்கப்பட்டிருந்தது.
எனினும் வருகின்ற 22 ஆம் திகதி அனைத்து பங்குதாரர்கள் விசேடமாக வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர்கள்,பிரதேச சபை மற்றும் முதலீட்டாளர்கள் எல்லா பங்கு தாரர்களும் இணைந்து ஒரு கூட்டத்தை ஒழுங்கமைத்துள்ளோம் அதன் பின்னர் 6 மணல் திட்டுக்களையும் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மிக விரைவில் இடம்பெற இருக்கின்றது.
மணல் திட்டுக்களை எவ்வாறு பார்ப்பது..!
6 மணல் திட்டுக்களில் ஒரு மணல் திட்டில் சுற்றுலா பயணிகள் இறங்கி பார்வையிடுவதற்கான ஏற்பாடும் ஏனைய திட்டுக்களை படகில் இருந்தவாறே சுற்றிப்பார்ப்பதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
