சம்பத் மனம்பேரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தீர்ப்பை வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (26) வழங்கியுள்ளது.
மித்தெனிய பகுதியில் ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்த சம்பவம் தொடர்பாக அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீண்ட நாள் தலைமறைவாகியிருந்த நிலையில் அண்மையில் நீதிமன்றில் சரணடைந்ததை தொடர்ந்து மனம்பேரி கைது செய்யப்பட்டிருந்தார்.
குற்றச்செயல்கள்
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் பாதாள உலக கும்பல்களுடன் நெருங்கிய உறவைப் பேணி பல்வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டிருந்தமை கண்டறிப்பட்டது.
மேலும், சந்தேகநபரான சம்பத் மனம்பேரி, கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பணியாளராகவும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதேச சபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
