கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Thulsi
ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று புதன்கிழமை (31) மாலை கட்டுநாயக்க காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட 18வது போஸ்ட் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சந்தேக நபரிடமிருந்து 342 கிராம் 70 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 152 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி