காலி சிறைச்சாலைக்குள் வந்து விழுந்த பொதியால் பரபரப்பு
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Jaso
காலி சிறைச்சாலையின் பாதுகாப்பு சுவருக்கு அருகில், சிறைச்சாலையின் சமையலறைக்குப் பின்னால் உள்ள கைதிகள் குளிக்கும் நீர் தொட்டி பகுதிக்கு நபரொருவர் வௌியிலிருந்து பொதி ஒன்றை வீசியுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளால் குறித்த பொதி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், உள்ளே மதுபானம் என சந்தேகிக்கப்படும் திரவம் அடங்கிய 3 போத்தல்களும், ஒரு தொலைபேசி சார்ஜரும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் அழிப்பு
காலி சிறைச்சாலை சிறைச்சாலை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்