தமிழர் உட்பட இருவரின் மரணத்திற்கு காரணமானவருக்கு ஏற்பட்ட நிலை
சிங்கப்பூரில் தமிழர் உட்பட இருவரின் மரணத்திற்கு காரணமாக இருந்த வாகன சாரதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் 20ஆம் திகதி ஜாலான் பஹாரை (Jalan Bahar) நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் (PIE)இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி பிரபு என்ற நபர் 17 ஊழியர்களை ஏற்றிய பாரவூர்தியை செலுத்தி சென்றுள்ளார்.இதன்போது சுகுணன் சுதீஷ்மன், டோஃபஸல் ஹொசைன் (Tofazzal Hossain) என்ற இரண்டு ஊழியர்கள் பாரவூர்தி ஓட்டுநர் அமரும் இடத்துக்குப் பின்புறம் மிக அருகில் இருந்தனர்.
விரைவுச்சாலையில் தடம் மாற முற்பட்டவேளை விபத்து
விரைவுச்சாலையில் தடம் மாற முற்பட்டபோது குப்பைகளைத் திரட்டும் கனரக வாகனம் ஒன்று அருகில் நிறுத்தப்பட்டிருந்ததை பிரபு கவனிக்கத் தவறினார். சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தாலும், அதன் ஒரு பகுதி, பிரபு ஓட்டிய பாரவூர்தி சென்ற தடத்தில் இருந்தது.
இதன்போது பாரவூர்தி, கனரக வாகனத்தின்மீது மோதியதை அவரால் தவிர்க்கமுடியவில்லை. ஊழியர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 15 பயணிகள் காயமுற்றனர்.
வாகனம் செலுத்த தடை
இந்த வழக்கில் பிரபுவுக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் 8 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டவும் வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.