அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிரான மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆனந்த விஜேபால நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவைப் பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி
நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், ஆனந்த விஜேபால ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றி வருவதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே அரசியலமைப்பின் பிரகாரம் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகைமையற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |