தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) காவல்துறைமா அதிபராக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எடுத்த முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த மனுக்கள் இன்று (28) நீதிபதிகள் ஜனக் டி சில்வா, சோபித ராஜகருணா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது குறித்த மனுக்களை செப்டம்பர் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தாக்கல் செய்யப்பட்ட மனு
தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபராக நியமித்ததற்கு எதிராக கர்தினால் மல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjith) மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன், காவல்துறைமா அதிபராகப் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அரசியலமைப்புச் சபையில் பெரும்பான்மை வாக்குகளால் அந்த நியமனம் அங்கீகரிக்கப்படவில்லை என்று மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
