யாழில் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் - அதிகாலையில் சம்பவம்
Sri Lanka Police
Jaffna
Crime
By Thulsi
யாழ்ப்பாணம் (Jaffna) - கொழும்புதுறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்கான காரணம்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் சிறைக் காவலாளியின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி