பாணில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதனின் கைவிரல் தோல்! பகிரப்படும் புகைப்படம்
ஹட்டனில் உள்ள ஒரு பேக்கரியில் நேற்றுமுன்தினம் (25) வாங்கப்பட்ட துண்டுகளாக்கப்பட்ட மற்றும் பொதியிடப்பட்ட பாணில், பேக்கரி ஊழியரின் விரலில் ஏற்பட்ட காயத்திலிருந்த ஒரு தோல் துண்டு கண்டுபிடிக்கப்பட்டங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
(25) ஆம் திகதி, இரவு உணவிற்கு ஒரு வாடிக்கையாளர் பேக்கரியில் இருந்து துண்டுகளாக்கப்பட்ட மற்றும் பொதியிடப்பட்ட பாணை ரூ. 180 க்கு வாங்கி, அதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பாணின் துண்டில் விரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து ஒரு தோல் துண்டை போல் ஒரு பகுதி இருப்பதைக் கண்தாக தெரிவிக்கப்படுகிறது.
பொது சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைப்பு
இந்நிலையில் வாடிக்கையாளர் பாணை உட்கொள்ளவில்லை என்றும், பாண் மற்றும் விரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட தோலை ஹட்டன் டிக்கோயா நகராட்சி மன்றத்தின் பொது சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு
இந்த சம்பவம் தொடர்பாக பேக்கரி உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் மேலும் பல வழக்குகளைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

images -ada
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |