சிறிலங்கன் எயர்லைன்ஸ் குறித்து வெளியான தகவல்

SriLankan Airlines Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lanka Tourism
By Sathangani Oct 16, 2024 09:12 AM GMT
Report

சிறிலங்கன் எயர்லைன்ஸை (SriLankan Airlines) தனியார் மயப்படுத்தும் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கைவிட தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் புதிய தலைவர் சரத்கனேகொட (Sarath Ganegoda) தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதிக இலாபம் ஈட்டும் விமான சேவையாக சிறிலங்கன் எயர்லைன்ஸை மாற்றுவதற்கு தேவையான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரிரிஜி ஏசியாவிற்கு (TTG Asia) வழங்கியுள்ள நேர்காணலில் சிறிலங்கன் எயர்லைன்ஸின் புதிய தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாதி சிங்களமும் பாதி தமிழுமாக மாறிய தமிழரசுக் கட்சி

பாதி சிங்களமும் பாதி தமிழுமாக மாறிய தமிழரசுக் கட்சி

ஜனாதிபதி அறிவுறுத்தல்

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,  சிறிலங்கன் எயர்லைன்ஸ் என்பது அனைத்து இலங்கையர்களும் பெருமைப்படும் நிறுவனமாக விளங்கவேண்டும் அதன் உரிமையாளர்களாக இலங்கையர்களே விளங்கவேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

சிறிலங்கன் எயர்லைன்ஸ் குறித்து வெளியான தகவல் | Plan To Privatize Srilankan Airlines Was Shelved

சிறிலங்கன் எயார்லைன்ஸ் பல வருடங்களாக நஷ்டத்தை சந்தித்து வருவதால், அதனை கையகப்படுத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் கடந்த அரசாங்கம் ஏலங்களை அழைத்திருந்தது.

அந்த திட்டத்தின் கீழ், விமான நிறுவனத்தின் 51% பங்குகள் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் எனவும் மீதமுள்ள 49% முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

அதற்கு, 6 ​​தரப்பினர் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தனர், ஆனால் அவர்கள் யாரும் அமைப்பின் அடுத்த கட்டத்திற்கு தகுதி பெறவில்லை.

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : ஆரம்பமானது கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : ஆரம்பமானது கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை

சுற்றுலாப் பயணிகள்

இதற்கிடையில், சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான காலப்பகுதியில் இயக்க லாபத்தையும் பதிவு செய்ய முடிந்தது. அதன் திரட்டப்பட்ட கடன் 1.2 பில்லியன் டொலர்களாகக் காணப்படுகிறது.

சிறிலங்கன் எயர்லைன்ஸ் குறித்து வெளியான தகவல் | Plan To Privatize Srilankan Airlines Was Shelved

நாட்டின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு சிறிலங்கன் எயார்லைன்ஸ் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 50% பேர் சிறிலங்கன் விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

2024 ஆம் ஆண்டிற்கு 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட இலங்கை, 2030 ஆம் ஆண்டளவில் அந்த எண்ணிக்கையை 3 மில்லியனாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.“ என தெரிவித்துள்ளார்.

மதுபானசாலை விவகாரத்தில் அதிக அக்கறை காட்டும் தமிழ் அரசியல்வாதிகள் : கடுமையாக சாடும் அமைப்பு

மதுபானசாலை விவகாரத்தில் அதிக அக்கறை காட்டும் தமிழ் அரசியல்வாதிகள் : கடுமையாக சாடும் அமைப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020