அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்
அமெரிக்காவின் (United States) சான் டியாகோவில் நடந்த விமான விபத்தில் பலர் உயிரிழந்து இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா - கலிபோர்னியாவின் (California) சான்டியாகோ பகுதியில் நேற்றைய தினம் (22.05.2025) சிறிய விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.
தனியார் ஒருவருக்கு சொந்தமான அந்த சிறிய ரக விமானத்தில் 10 பேர் வரை பயணித்தாக சொல்லப்படுகிறது. எனினும் இது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
விமான விபத்து
இந்த விமான விபத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில், உதவி தீயணைப்புத் துறை தலைவர் டான் எடி அந்நாட்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது, இந்த விமானம் விபத்துக்குள்ளாகும் முன் மின் கம்பியில் மோதியதா என்கின்ற ஒரு சந்தேகம் உள்ளது.
உயிரிழப்புகளின் எண்ணிக்கை
மேலும் இது குறித்து புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, விமானம் சாலையில் மோதியபோது, விமானத்தின் எரிபொருள் கீழே பரவி, சாலையின் தீ பரவியதுடன் இருபுறமும் இருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விமான விபத்துக்கான சரியான காரணத்தையும், இறுதி உயிரிழப்புகளின் எண்ணிக்கையையும் கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
