நடு மைதானத்தில் சரிந்த கிரிக்கெட் வீரர்! பின்னர் நடந்த துயரம்
பேருவளையில் உள்ள பாடசாலை ஒன்றின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டியின் போது துடுப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த 46 வயதுடைய நபர் ஒருவர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
அந்த நேரத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட போட்டியின் காட்சிகளின்படி, இந்தச் சம்பவத்திற்கு முன்னர் அவர் மூன்று பந்துகளில் ஆட்டமிழக்காமல் 6 ஓட்டங்களைப் பெற்றிருந்துள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம்
இந்த நிலையில், குறித்த மரணமானது, மாரடைப்பால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், அதற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

குறித்த திடீர் துயரச் சம்பவத்தால் வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, ஏற்பாட்டாளர்கள் போட்டியின் எஞ்சிய பகுதியை நிறுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |