கனேடிய பிரதமர் அளித்த உறுதிமொழி
கனடாவில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது ஏற்புடையதல்ல என தெரிவித்த பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ(Justin Trudeau) இவ்வாறு நீண்ட வரிசையில் காத்திருப்போருக்கு உறுதிமொழியொன்றை வழங்கியுள்ளார்.
இதன்படி இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலைமை காணப்படுவதனை தாம் ஒப்புக் கொள்வதாக அவர் (Justin Trudeau) குறிப்பிட்டுள்ளார்.
கடவுச்சீட்டு விநியோகத்தில் நிலவி வரும் கால தாமதத்தை கருத்திற் கொண்டு ஜனவரி மாதம் 600 பணியாளர்களை கடவுச்சீட்டு திணைக்களத்தில் இணைத்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ(Justin Trudeau) மேலும் குறிப்பிட்டுள்ளார்.