தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு திட்டம்: ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த வட மாகாண ஆளுநர்

Jaffna Ranil Wickremesinghe P. S. M. Charles
By Aadhithya Aug 02, 2024 02:44 PM GMT
Report

வடமாகாணத்தில் பாரிய குடிநீர் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு உதவிய ஜனாதிபதிக்கு நாம் நன்றி கூற வேண்டு என வட மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்லஸ் (P.S.M. Charles) தெரிவித்துள்ளார்.

தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (02) கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ”2015 ஆம் ஆண்டில், அவர் பிரதமராக இருந்த காலத்தில், முழுத் திட்டத்தையும் சீரமைத்து, அதற்குத் தேவையான மேலதிக நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்ள வழி செய்தார்.

ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட யாழ். தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்

ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட யாழ். தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்


செயல்பாட்டு திட்டம்

2017 ஆம் ஆண்டில், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் (ADB) கூடுதல் நிதியுதவி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் திட்டம் மேலும் வலுவடைந்தது.

தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு திட்டம்: ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த வட மாகாண ஆளுநர் | Pms Charles Thanks President Ranil

இந்த ஒப்பந்தம் கடல் நீரில் உப்புநீக்கும் நிலையத்தின் செயல்பாட்டை எளிதாக்கிய அதேவேளை, அதன் நிர்மாணம் மற்றும் ஐந்தாண்டு செயல்பாட்டு திட்டம் உட்பட திட்டத்தின் கூடுதல் செலவுகளை ஈடுகட்டவும் உதவியது.

ஜனாதிபதியின் அர்ப்பணிப்பின் பலனாக யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டங்களில் வாழும் சுமார் 3 இலட்சம் மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த பாதுகாப்பான குடிநீர் வசதி இன்று கிடைத்துள்ளது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற உலகத் தமிழ் இலக்கிய மாநாடு

மட்டக்களப்பில் இடம்பெற்ற உலகத் தமிழ் இலக்கிய மாநாடு


சுகாதார வசதிகள்

மேலும், யாழ்ப்பாண நகரில் வாழும் 80,000 மக்களின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், வடமாகாண விவசாயத் துறையும் குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெற்றுள்ளது.'' என குறிப்பிட்டுள்ளார்.

தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு திட்டம்: ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த வட மாகாண ஆளுநர் | Pms Charles Thanks President Ranil

மேலும், இராஜாங்க அமைச்சர்களான கலாநிதி சுரேன் ராகவன், காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்ன், அங்கஜன் இராமநாதன் (Angajam Ramanathan), தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க (Sagala Rathnayake), முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake), முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் (Vijayakala Maheshwaran) உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்ட மக்களுக்கான நிரந்தர காணி உறுதி பத்திரம் : வெளியான மகிழ்ச்சி தகவல்

பெருந்தோட்ட மக்களுக்கான நிரந்தர காணி உறுதி பத்திரம் : வெளியான மகிழ்ச்சி தகவல்




செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021