முல்லைத்தீவில் அத்துமீறிச் செயற்படும் காவல்துறை உத்தியோகத்தர்: மக்கள் குற்றச்சாட்டு
முல்லைத்தீவு (Mullaitivu) ஒட்டுசுட்டான் காவல் நிலையத்தில் கடமையாற்றும் ரொட்விக்கோ என்னும் காவல்துறை உத்தியோகத்தர் மக்களோடு அடாவடித்தனமாகச் செயற்படுவதாக மக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு (Durairasa Ravikaran) தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ரவிகரன் ஒட்டுசுட்டான் காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளார்.
உத்தியோகத்தர் நடவடிக்கை
அத்தோடு, குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் எதிர்வரும் (16.08.2025) திகதி சனிக்கிழமை ஒட்டுசுட்டான் காவல் நிலையத்திற்கு முன்பாக மக்களோடு இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது ஒட்டுசுட்டான் காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ரொட்விக்கோ என்னும் காவல்துறை உத்தியோகத்தர் ஒட்டுசுட்டான் காவல் நிலையப்பிரிவிற்குட்பட்ட மக்கள் மீது பொய் குற்றங்களைப் பதிவுசெய்வது, மக்கள் மீது அத்துமீறித் தாக்குவது மற்றும் மக்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும் வகையில் செயற்படுவது உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
