2018 ல் மட்டு வவுணதீவு காவல்துறையினர் படுகொலை : பிழையான தகவல் வழங்கிய காவல்துறை பரிசோதகர் சிக்கினார்

CID - Sri Lanka Police Batticaloa Easter Attack Sri Lanka
By Sumithiran Jul 22, 2025 05:37 PM GMT
Report

மட்டக்களப்பு(batticaloa) வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு காவல்துறை உத்தியோகத்தர்களை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியம் கொலை செய்த சம்பவம் தெடார்பில் பிழையான தகவலை வழங்கிய சம்பவத்தில் அப்போது மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரும் தற்போது கந்தளாய் காவல் நிலையத்தில் கடமையாற்றிவருபவருமாக காவல்துறை பரிசோதகர் ஒருவரை நேற்று திங்கட்கிழமை (21) சிஐடி யினர் கொழும்பில் வைத்து கைது செய்துள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது சம்பவத்தின் பின்னணி தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இரண்டு காவல்துறையினர் படுகொலை

கடந்த 2018 நவம்பர் 29 ம் திகதி வவுணதீவு வலையிறவு காவல்துறை சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இருந்த காவல்துறை சாஜன்ட்நிரோசன் இந்திரபிரசன்னா, மற்றும் காவல்துறை கொஸ்தாபர் டினேஸ் ஆகிய இருவரை இனந் தெரியாதவர்கள் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொலை செய்து அவர்களின் கைத் துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றனர்.

2018 ல் மட்டு வவுணதீவு காவல்துறையினர் படுகொலை : பிழையான தகவல் வழங்கிய காவல்துறை பரிசோதகர் சிக்கினார் | Police Arrested For Giving False Information

   இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் விடுதலைப்புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்று வெளிவந்த வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த அஜந்தன் என்பவர் பாவித்து வந்த ஜக்கட் பாலத்தின் கீழ் வீசி எறிந்து கிடப்பதாகவும் அவர் இந்த படுகொலையை செய்ததாக அரச மற்றும் புலனாய்வு பிரிவினர் அறிக்கையிட்டதையடுத்து அவரை கடந்த 2018 நவம்பர் 30 ம் திகதி காவல்துறையினர் கைது செய்தனர்.

செம்மணி புதை குழியில் மனதை உருக்கும் சம்பவம் :குழந்தைகள் பால் அருந்தும் போத்தலும் கண்டுடிப்பு

செம்மணி புதை குழியில் மனதை உருக்கும் சம்பவம் :குழந்தைகள் பால் அருந்தும் போத்தலும் கண்டுடிப்பு

 முன்னாள் போராளி கைதும் விடுதலையும்

  இதில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கொழும்பிலுள்ள நான்காம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

2018 ல் மட்டு வவுணதீவு காவல்துறையினர் படுகொலை : பிழையான தகவல் வழங்கிய காவல்துறை பரிசோதகர் சிக்கினார் | Police Arrested For Giving False Information

  இந்த நிலையில் 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் சஹ்ரானின் சாரதியான முகமது சர்ப் ஆதம்லெப்பை, மில்ஹான், பிறதோஸ். நில்காம் ஆகிய 4 பேரை கைது செய்ததன் பின்னர் அவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளதாக தெரிய வந்ததையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் பேராளியை விடுதலை செய்தனர்

இராணுவப் புலனாய்வுப் பிரிவுகள் கிழக்கில் மேற்கொண்ட ஒரு முக்கிய சதி நடவடிக்கை

இராணுவப் புலனாய்வுப் பிரிவுகள் கிழக்கில் மேற்கொண்ட ஒரு முக்கிய சதி நடவடிக்கை

 கண்டறியப்பட்ட உண்மை - சிக்கிய காவல்துறை அதிகாரி

 தற்போது தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியதையடுத்து இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த காவல்துறையினர் படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பவம் மூடிமறைக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது சுமத்தப்பட்டதை கண்டறிந்தனர்.

2018 ல் மட்டு வவுணதீவு காவல்துறையினர் படுகொலை : பிழையான தகவல் வழங்கிய காவல்துறை பரிசோதகர் சிக்கினார் | Police Arrested For Giving False Information

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக அப்போது மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரும் தற்போது கந்தளாய் காவல் நிலையத்தில் கடமையாற்றிவருபவருமான காவல்துறை பரிசோதகர் ஒருவரை சிஐடி யினர் கொழும்புக்கு விசாரணைக்கு நேற்று திங்கட்கிழமை (21) அழைத்து விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 8ம் திகதி மட்டக்களப்பு கரடியனாறு தேசிய புலனாய்வு சேவை பிரிவில் கடமையாற்றிவரும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை சிஐடி யினர் கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் காவல்துறையின் அடாவடி! கொடூர தாக்குதல் - தக்க பாடம் புகட்டிய மக்கள்

யாழில் காவல்துறையின் அடாவடி! கொடூர தாக்குதல் - தக்க பாடம் புகட்டிய மக்கள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026