2018 ல் மட்டு வவுணதீவு காவல்துறையினர் படுகொலை : பிழையான தகவல் வழங்கிய காவல்துறை பரிசோதகர் சிக்கினார்

CID - Sri Lanka Police Batticaloa Easter Attack Sri Lanka
By Sumithiran Jul 22, 2025 05:37 PM GMT
Report

மட்டக்களப்பு(batticaloa) வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு காவல்துறை உத்தியோகத்தர்களை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியம் கொலை செய்த சம்பவம் தெடார்பில் பிழையான தகவலை வழங்கிய சம்பவத்தில் அப்போது மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரும் தற்போது கந்தளாய் காவல் நிலையத்தில் கடமையாற்றிவருபவருமாக காவல்துறை பரிசோதகர் ஒருவரை நேற்று திங்கட்கிழமை (21) சிஐடி யினர் கொழும்பில் வைத்து கைது செய்துள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது சம்பவத்தின் பின்னணி தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இரண்டு காவல்துறையினர் படுகொலை

கடந்த 2018 நவம்பர் 29 ம் திகதி வவுணதீவு வலையிறவு காவல்துறை சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இருந்த காவல்துறை சாஜன்ட்நிரோசன் இந்திரபிரசன்னா, மற்றும் காவல்துறை கொஸ்தாபர் டினேஸ் ஆகிய இருவரை இனந் தெரியாதவர்கள் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொலை செய்து அவர்களின் கைத் துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றனர்.

2018 ல் மட்டு வவுணதீவு காவல்துறையினர் படுகொலை : பிழையான தகவல் வழங்கிய காவல்துறை பரிசோதகர் சிக்கினார் | Police Arrested For Giving False Information

   இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் விடுதலைப்புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்று வெளிவந்த வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த அஜந்தன் என்பவர் பாவித்து வந்த ஜக்கட் பாலத்தின் கீழ் வீசி எறிந்து கிடப்பதாகவும் அவர் இந்த படுகொலையை செய்ததாக அரச மற்றும் புலனாய்வு பிரிவினர் அறிக்கையிட்டதையடுத்து அவரை கடந்த 2018 நவம்பர் 30 ம் திகதி காவல்துறையினர் கைது செய்தனர்.

செம்மணி புதை குழியில் மனதை உருக்கும் சம்பவம் :குழந்தைகள் பால் அருந்தும் போத்தலும் கண்டுடிப்பு

செம்மணி புதை குழியில் மனதை உருக்கும் சம்பவம் :குழந்தைகள் பால் அருந்தும் போத்தலும் கண்டுடிப்பு

 முன்னாள் போராளி கைதும் விடுதலையும்

  இதில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கொழும்பிலுள்ள நான்காம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

2018 ல் மட்டு வவுணதீவு காவல்துறையினர் படுகொலை : பிழையான தகவல் வழங்கிய காவல்துறை பரிசோதகர் சிக்கினார் | Police Arrested For Giving False Information

  இந்த நிலையில் 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் சஹ்ரானின் சாரதியான முகமது சர்ப் ஆதம்லெப்பை, மில்ஹான், பிறதோஸ். நில்காம் ஆகிய 4 பேரை கைது செய்ததன் பின்னர் அவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளதாக தெரிய வந்ததையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் பேராளியை விடுதலை செய்தனர்

இராணுவப் புலனாய்வுப் பிரிவுகள் கிழக்கில் மேற்கொண்ட ஒரு முக்கிய சதி நடவடிக்கை

இராணுவப் புலனாய்வுப் பிரிவுகள் கிழக்கில் மேற்கொண்ட ஒரு முக்கிய சதி நடவடிக்கை

 கண்டறியப்பட்ட உண்மை - சிக்கிய காவல்துறை அதிகாரி

 தற்போது தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியதையடுத்து இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த காவல்துறையினர் படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பவம் மூடிமறைக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது சுமத்தப்பட்டதை கண்டறிந்தனர்.

2018 ல் மட்டு வவுணதீவு காவல்துறையினர் படுகொலை : பிழையான தகவல் வழங்கிய காவல்துறை பரிசோதகர் சிக்கினார் | Police Arrested For Giving False Information

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக அப்போது மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரும் தற்போது கந்தளாய் காவல் நிலையத்தில் கடமையாற்றிவருபவருமான காவல்துறை பரிசோதகர் ஒருவரை சிஐடி யினர் கொழும்புக்கு விசாரணைக்கு நேற்று திங்கட்கிழமை (21) அழைத்து விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 8ம் திகதி மட்டக்களப்பு கரடியனாறு தேசிய புலனாய்வு சேவை பிரிவில் கடமையாற்றிவரும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை சிஐடி யினர் கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் காவல்துறையின் அடாவடி! கொடூர தாக்குதல் - தக்க பாடம் புகட்டிய மக்கள்

யாழில் காவல்துறையின் அடாவடி! கொடூர தாக்குதல் - தக்க பாடம் புகட்டிய மக்கள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025