வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் - காவல்துறையின் வழக்கால் பரபரப்பு
பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணி ஜெயராம் கணவர் இறப்பிற்கு பின்னர், நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
வாணி ஜெயராமின் சகோதரருக்கு தகவல்
இவரது வீட்டில் பணிபுரியும் பெண், வழக்கம்போல் நேற்று காலை வீட்டிற்கு வந்து பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனையடுத்து அவர் பக்கத்து வீட்டார்களிடம் தகவலை கூறிய நிலையில், அவர்கள் வாணி ஜெயராமுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்துள்ளனர். அவர் போனை எடுக்காததால் வாணி ஜெயராமின் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனே விரைந்து வந்த அவர் தன்னிடம் இருந்த மற்றொரு சாவியின் மூலம் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது தலையில் அடிபட்டு இரத்த காயங்களுடன் வாணி ஜெயராம் இறந்து கிடந்துள்ளார்.
வாணி ஜெயராம் உடல் மீட்பு
இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து வந்த அவர்கள் வாணி ஜெயராம் உடலை மீட்டுள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானதாக ஐபிஓ 174 பிரிவின்படி வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் வாணி ஜெயராமன் மரணம் குறித்த அடுத்த கட்ட விசாரணையை தொடங்கவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
