குருநாகல் வாகன விபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பலி
Kurunegala
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Harrish
குருநாகலில் (Kurunegala) இடம்பெற்ற வாகன விபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் நிக்கவரெட்டிய, ரஸ்நாயக்கபுர பகுதியில் நேற்று (08.03.2025) இடம்பெற்றுள்ளது.
விபத்துச் சம்பவம்
விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், “ நிக்கவரெட்டிய, ரஸ்நாயக்கபுர பகுதியில் வேகமாக பயணித்த வான் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து காவல்துறை சோதனைச் சாவடியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, சோதனைச் சாவடியில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி