சிறுமி மரணம் -ரிசாத் பதியுதீன் வீட்டிற்குள் புகுந்தனர் பொலிஸார்
police
colombo
house
richard bathiudeen
ishalini death
By Sumithiran
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்து மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி இஷாலினியின் மரணம் குறித்து விசாரிக்கும் பொலிஸ் குழுவினர், இன்று பிற்பகல் ரிசாத் பதியுதீனின் வீட்டையும் ஆய்வு செய்தனர்.
இதன்போது விசாரணை அதிகாரிகள் ஒரு லீட்டர் போத்தலில் மண்ணெண்ணெய் கொண்டு வந்திருப்பதை கண்டறிந்துள்ளனர்.
விசாரணையை நடத்திய மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், சிறுமி தன்னை் தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு நிராகரிக்கப்படும் என்று கூறினார்.
மேலும், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான இஷாலினி மறுநாளே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.