வெளிநாட்டு நாணய பரிமாற்றம் தொடர்பில் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு
அங்கீகரிக்கப்பட்ட பணப் பரிமாற்ற மையங்கள் அல்லது உரிமம் பெற்ற வங்கிகள் மூலமாக மட்டுமே வெளிநாட்டு நாணயத்தைப் பரிமாற்றம் செய்யுமாறு இலங்கை காவல்துறையினர் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அங்கீகரிக்கப்படாத நபர்கள் மூலம் பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்கள், போலி நாணயத்தாள் மோசடிகளுக்குப் பலியாகும் அபாயம் உள்ளதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
பணப் பரிமாற்றம்
இது தொடர்பாகப் பேசிய காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை கண்காணிப்பாளர் (ASP) எஃப்.யு. வூட்லர், அனைத்து வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகளையும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பணப் பரிமாற்ற மையங்கள் அல்லது வங்கிகள் மூலமாகவே மேற்கொள்ளுமாறு வெளிநாட்டினரை வலியுறுத்தியுள்ளார்.

அங்கீகரிக்கப்படாத பணப் பரிமாற்ற சேவைகளைப் பயன்படுத்தும் வெளிநாட்டினர், போலி நாணய மோசடிகள் மற்றும் பிற ஏமாற்று நடவடிக்கைகளுக்கு ஆளாகக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |