மட்டக்களப்பில் கஜமுத்துடன் காவல்துறை உத்தியோகத்தர் கைது
மட்டக்களப்பில் பல இலச்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (21) மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட காவல்துறை
இதையடுத்து மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் ஆலேசாசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறை பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலாக குழுவினர் சம்பவதினமான நேற்று காலை 11.00 மணியளவில் ஏறாவூர் பிரதேசத்தில் வீதி ஒன்றில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது குறித்த நபர் தடைசெய்யப்பட்ட யானை தந்தத்தின் பாகமான நான்கு கஜமுத்துக்களை எடுத்து வந்து வியாபாரத்தில் ஈடுபட்ட போது அங்கு மாறு வேடத்;தில் இருந்த பொலிசார் சுற்றிவளைத்து அவரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகத்தருக்கு கஜமுத்துக்களை விற்பனை செய்த அம்பாறை சாய்ந்தமருதைச் சேர்ந்த 57 வயதுடைய கட்டிட ஒப்பந்தகார் ஒருவரை 18 கஜமுத்துக்களுடன் ஏறாவூரில் வைத்து மாலை 5.00 மணிக்கு கைது செய்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதில் கைது செய்யப்பட்டவர் ஏறாவூரைச்சேர்ந்த 57 வயதுடையவர் எனவும் இவர் கடந்த 2005 ஆம் ஆண்டில் காவல்துறை சேவையில் இருந்து நீக்கப்பட்டவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரையும் தொடர்ந்து விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணை பிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
