கொலை மிரட்டல் : காவல்துறை அதிகாரி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்

Police spokesman Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Sumithiran Feb 28, 2024 05:54 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

பாதாள உலக குழுவினரின் கொலை மிரடட்டல் காரணமாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க என்பவரே வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவராவார்.

விசாரணைகள் ஆரம்பம்

இதேவேளை வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற காவல்துறை பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க மற்றும் அவரது குடும்பத்தினரை இலக்கு வைத்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொலை மிரட்டல் : காவல்துறை அதிகாரி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம் | Police Officer Flees Abroad After Death Threats

காவல்துறை அதிகாரி துமிந்த ஜயதிலக்க பெப்ரவரி 14 அன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் பிரான்சுக்குப் புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரை மிரட்டியதாகக் கூறப்படும் கும்பல்களில் கஞ்சிபானி இம்ரான் மற்றும் ஹீனாட்டியான மகேஷ் ஆகியோர் அடங்குவர்.

‘என்னை விட்டு எங்கேயும் போய் விடாதே’ : கண்ணீரை வரவழைக்கும் சாந்தனின் நெகிழ்ச்சியான வார்த்தை

‘என்னை விட்டு எங்கேயும் போய் விடாதே’ : கண்ணீரை வரவழைக்கும் சாந்தனின் நெகிழ்ச்சியான வார்த்தை

காவல்துறைக்கு ஏற்பட்ட சந்தேகம்

காவல்துறை அதிகாரி ஜயதிலக, குற்றவாளிகளிடமிருந்து தனக்கு வந்ததாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விமானத்தில் இருந்தே ஊடகங்களுக்கு பல அறிக்கைகளை வெளியிட்டார். அனைத்து சம்பவங்கள் குறித்தும் நியாயமான சந்தேகம் நிலவுவதாகவும், காவல்துறை அதிகாரி நன்மைகள் அல்லது அனுகூலங்களை பெற முயற்சித்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிப்பதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

கொலை மிரட்டல் : காவல்துறை அதிகாரி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம் | Police Officer Flees Abroad After Death Threats

அடுருப்பு வீதி காவல் நிலையத்தில் இரண்டு சந்தேக நபர்களுக்கு விஷம் அருந்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து குறித்த அதிகாரிக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகனுக்காக உணவோடு காத்திருந்த தாய்... உயிரற்ற உடலாக வரும் மகன்..!

மகனுக்காக உணவோடு காத்திருந்த தாய்... உயிரற்ற உடலாக வரும் மகன்..!

பல கொலை மிரட்டல்கள் வந்ததாக

இந்த விசாரணையின் போது பலர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு பல கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. சமீபகாலமாக பாதாள உலகக் குற்றவாளிகளிடமிருந்து தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அந்த அதிகாரி சிரேஷ்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என பேச்சாளர் கூறினார். எவ்வாறாயினும், அவ்வாறான அச்சுறுத்தல்கள் குறித்து அதிகாரி தெரிவித்தவுடன், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் காவல்துறை அதிகாரி துமிந்த ஜயதிலக்கவிற்கு உத்தியோகபூர்வ துப்பாக்கி ஒன்றை வழங்கியதாக அவர் கூறினார்.

கொலை மிரட்டல் : காவல்துறை அதிகாரி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம் | Police Officer Flees Abroad After Death Threats

இந்த நடவடிக்கை இருந்தபோதிலும், அவர் தனது மனைவி மற்றும் ஏழு வயது மகளின் பாதுகாப்பை உறுதிசெய்து ஒரு பாதுகாப்பான இடத்தில் பிரான்ஸ் செல்ல விரும்பினார்.

சாந்தன் மரணத்தில் சந்தேகம்: திடுக்கிடும் தகவல்களை கூறும் சட்டத்தரணி

சாந்தன் மரணத்தில் சந்தேகம்: திடுக்கிடும் தகவல்களை கூறும் சட்டத்தரணி

பணிக்குத் திரும்பவில்லை என்றால்

கடந்த வருடம் பல கொலைச் சந்தேக நபர்களை கைது செய்வதில் இன்ஸ்பெக்டர் ஜயதிலக முக்கிய பங்காற்றியதாக தெரிவிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) இருந்து 'ஹரக் கட்டா' தப்பிச் செல்ல முயன்றது குறித்து விசாரணை நடத்துவதில் இன்ஸ்பெக்டர் ஜெயதிலகவும் ஈடுபட்டார். விசாரணைகளின் போது, சம்பவத்துடன் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை மிரட்டல் : காவல்துறை அதிகாரி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம் | Police Officer Flees Abroad After Death Threats

அந்த அதிகாரி பெப்ரவரி 14 முதல் மார்ச் 6 வரை விடுமுறையைப் பெற்றதாகவும், மார்ச் 6 ஆம் திகதிக்கு முன்னர் அவர் பணிக்குத் திரும்பவில்லை என்றால், அவர் தனது பதவியை காலி செய்ததாகக் கருதுவார்கள் என்றும் ஊடகப்பேச்சாளர் மேலும் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023