13 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற கொலை!! மூன்று காவல்துறை அதிகாரிகள் கைது
13 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மரணம் தொடர்பில் விளாச்சிய காவல் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓஐசி, சிரேஷ்ட காவல் பரிசோதகர் மற்றும் காவல் உத்தியோகத்தர் ஆகியோரை எதிர்வரும் ஜுன் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்துன் லசித்த குமார விதான என்ற நபரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பான இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
13 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு வாழைத்தோட்டம் காவல் பிரிவுக்கு உட்பட்ட மாளிகாவத்தை ரயில் வீடமைப்புத் திட்டத்திற்கு அருகில் படல்கம காவல் நிலையத்தில் அப்போது கடமையாற்றிய அதிகாரிகள், தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரின் பணிப்புரிமைக்கு அமைய மூன்று காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
