யாழில் தப்பிச் சென்ற வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது கொடிகாமம் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்றைய தினம் (20) யாழ்ப்பாணம் – வரணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையிலிருந்த கொடிகாமம் காவல்துறையினர் நிறுத்த முயற்சித்த போது குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தாது கொடிகாமம் பகுதியை நோக்கி தப்பியோடியது.
ரயர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு
இதையடுத்து காவல்துறையினர் குறித்த டிப்பர்வாகனத்தை, தமது வாகனத்தில் துரத்திச் சென்ற நிலையில் டிப்பர் வாகனத்தின் ரயர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர்.
இதையடுத்து குறித்த டிப்பர் வாகனத்தை நிறுத்திவிட்டு சாரதி உட்பட இரண்டு சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை கொடிகாமம் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன் தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
