மேலும் 23 பேரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை (படங்கள்)
மேலும் பலரை கைது செய்ய நடவடிக்கை
ஜூலை 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தொடர்பில் மேல் மாகாண (தெற்கு) குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 23 சந்தேகநபர்கள்
மேலும் 23 சந்தேகநபர்கள் முக்கியமாக போராட்டத்தில் ஈடுபட்டு, அநாகரிகமாக நடந்துகொண்டநிலையில் வீடியோ காட்சிகளில் படம்பிடிக்கப்பட்ட படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர். 0112 829 388- 071 30 64 165 - 071 85 92 209
இதேவேளை அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 50 சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு நேற்றையதினமும் காவல்துறையினர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


