யாழில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான இளைஞர்
யாழில் (Jaffna) துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (24) இரவு 7:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் பாலாவி தெற்கு கொடிகாமத்தைச் சேர்ந்த 20 வயதான மாணிக்கவாசகர் மதுசன் என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.
உழவு இயந்திரம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தென்மராட்சி கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழ்ந்த மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பகுதியில் காவல்துறையினர் இடைமறித்துள்ளனர்.

இதன்போது காவல்துறையினரின் கட்டளையை மீறிப் பயணித்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
மேலதிக சிகிச்சை
இதில், உழவு இயந்திரத்தின் சாரதியான இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த இளைஞர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |