போர் நிறுத்த ஒப்பந்த மீறல்: இஸ்ரேலுக்கு ட்ரம்பின் கடும் எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு (Israel) அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இந்தநிலையில், பலஸ்தீனத்தின் மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைத்தால் அமெரிக்காவின் அனைத்து வகையான ஆதரவுகளும் உடனடியாக திரும்பப் பெறப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1967ஆம் ஆண்டு அரபு நாடுகளுக்கு எதிராக போர் தொடுத்த இஸ்ரேல், பலஸ்தீனத்தின் பெரும்பான்மையான பகுதிகளை கைப்பற்றியது.
ஆக்கிரமிப்பு
இதில், மேற்கு கரையின் ஆக்கிரமிப்பு தொடர்பாக இஸ்ரேல்-பலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகின்றது.

இதன் ஒரு பகுதியாகவே, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரும் ஆரம்பமானது.
போர் நிறுத்தம்
இதையடுத்து, அமெரிக்காவின் தலையீட்டால் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த நிலையில், பலஸ்தீனத்தின் மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் மசோதா இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இதற்கு கடும் கண்டனம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அநாகரிகமான செயல்
இந்தநிலையில், மேற்கு கரையை இஸ்ரேல் இணைக்காது என்று தான் அரபு நாடுகளுக்கு வாக்குறுதி அளித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இந்த செயல் அநாகரிகமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், மேற்கு கரையை இஸ்ரேல் இணைத்தால், அமெரிக்காவின் அனைத்து வகையான ஆதரவுகளும் உடனடியாக திரும்பப் பெறப்படும் என டொனால்ட் டரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |