காவல்துறையினரின் அச்சுறுத்தல் தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் முறைப்பாடு
முல்லைத்தீவு குருந்தூர்மலையில் இடம்பெற்ற வழிபாட்டின்போது , அங்கு செய்தி சேகரிப்பிற்காகச் சென்றிருந்த ஊடகவியலாளருக்கு காவல்துறையினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இதுவிடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரினால், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த , கனேடிய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குட்படுத்தப்பட்டுள்ளது .
காவல்துறையினரால் அச்சுறுத்தல்
கடந்த14ஆம் திகதியன்று குருந்தூர்மலையில் செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் காவல்துறையினரால் , அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்தார்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட குறித்த ஊடகவியலாளர், காவல்துறையினரின் அச்சுறுத்தல் செயற்பாடு தொடர்பில், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார் .

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் 19.07.2023 நேற்று முல்லைத்தீவிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தநிலையிலேயே குறித்த விடயம் தொடர்பில் அவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
மேலும் காவல்துறையினரின் குறித்த அச்சுறுத்தல் செயற்பாடு தொடர்பில் ஏற்கனவே கடந்த 17.07.2023 திங்களன்று மனித உரிமை ஆணைக்குழுவிலும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.