திட்டமிடப்பட்ட ரணிலின் கைது - நள்ளிரவில் சிறைச்சாலை சென்ற அரசியல்வாதிகள்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை சர்வதேச ஊடகங்களில் முக்கிய செய்தியாக உள்ளதுடன் இலங்கை அரசியல்வாதிகள் பலரையும் ஆட்டம் காண வைத்துள்ளது.
அந்தவகையில், ரணில் விக்ரமசிங்கவின் விளக்கமறியல் உத்தரவின் பின்னர் நேற்று இரவு பல அரசியல்வாதிகள் மகசின் சிறைச்சாலைக்கு சென்று காத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனையின் பேரில் நேற்று இரவு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறைச்சாலைக்கு வெளியே
உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் , முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்ட ஆதரவாளர்கள் உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றிருந்தனர்.
சிறைச்சாலைக்கு சென்ற போதிலும் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை, பின்னர் அவர்கள் சிறைச்சாலைக்கு வெளியே காத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும், சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பார்வையிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
