யாழ். குடா நாடு முழுவதும் முழுநேர மின்வெட்டு - வெளியான அறிவிப்பு
வட மாகாணத்தில் எதிர்வரும் 26 ஆம் திகதி பகல் முழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) அறிவித்துள்ளது.
மின் கட்டமைப்பில் அவசியமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் மின்தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக என மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் விநியோகம் துண்டிக்கப்படும்
வவுனியா - மன்னார் இடையேயான 220 கே.வி. மின் பரிமாற்ற வடத்தை மாற்றி அமைப்பதற்கான வேலைகளுக்காக வட மாகாணத்திற்கான 132 கே.வி. வவுனியா - புதிய அநுராதபுர மின் பரிமாற்ற கட்டமைப்பு நிறுத்தப்படுவதால் இந்த மின் துண்டிப்பு என மின்சார சபை அறிவித்துள்ளது.
அந்தவகையில், எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை யாழ். குடா நாடு முழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
மற்றும் முல்லைத்தீவு மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
பொதுமக்கள் மின் தடை நேரத்திற்கு முன்னரே தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
