தலைவர் பிரபாகரனின் வீட்டை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம்! சிவாஜிலிங்கம் விளக்கம்
வல்வெட்டித்துறையில் உள்ள தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டினை பார்வையிட வந்த சிங்கள மக்கள், அங்கிருந்த மண்ணை கொண்டு சென்று வணங்கியதாக வல்வெட்டித்துறை நகரசபையின் நகரப்பிதா எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று(10.02.2026) கருத்து வெளியிட்ட அவர்,
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டினை பார்வையிட ஆயிரக்கணக்கில் படையெடுத்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்கள மக்கள்.
நூலக திட்டம்
அவர்கள் அந்த மண்ணை எடுத்து சென்றதால் ஏற்பட்ட கோபத்தில், அந்த வீட்டை இலங்கை இராணுவம் முற்றாக இடித்து அகற்றி வெறும் மணல் தரையாக மாற்றினர்.

இதன்படி தலைவர் பிரபாகரனின் அடையாளம் முழுமையாக அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவா இலங்கைப்படையும் அரசாங்கமுத் செயற்படுகின்றதா என்ற கேள்வியும் எழுகிறது.
இவ்வாறு மக்களின் கருத்துக்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் உலகத்தலைவர்கள் பலரின் வீடுகள் நினைவுச்சின்னங்களாக மாற்றப்பட்டதை போல தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டையும் அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எனினும் அதில் கட்டப்படுவதாக கூறப்படும் நூலகத்துக்கு எந்த தடையும் இல்லை.
மேலும் அதில் தலைவர் பிரபாகரனின் வீட்டின் மாதிரியையும், அவரின் பெற்றோர்களின் திருவுருவச்சிலைகளையும் நிறுவவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளோம்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
