கண்டியில் நடைபெறும் நிகழ்வு : கட்டுநாயக்காவில் தரையிறங்கிய தென்னிந்திய பிரபல நடிகர்
"நியேலினி" உலகளாவிய மாநாட்டுடன் இணைந்து நடைபெற்ற "Song of Resillience" என்ற மாற்று இசை நிகழ்ச்சியில் பங்கேற்க மூத்த கொலிவுட் கலைஞர் பிரகாஷ் ராஜ்(prakash raj) இன்று (09/07) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயம் குறித்து விவாதிக்கும் "நியேலினி" உலகளாவிய மாநாடு, உலகின் 102 நாடுகளைச் சேர்ந்த 500 விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் 09/08 முதல் 09/09 வரை கண்டியில் உள்ள போல்கொல்லா கூட்டுறவு கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது.
இசைநிகழ்ச்சியில் பங்கேற்க வருகை
இதன்படி அந்த நிகழ்வில் நடைபெறவுள்ள இசைநிகழ்ச்சியில் பங்கேற்க பிரகாஷ் ராஜ் இன்று மதியம் 12.55 மணிக்கு இந்தியாவின் பெங்களூரிலிருந்து இண்டிகோ விமானம் 6E-1167 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரை வரவேற்க பத்திரிகையாளர் தரிது உடுவரகெதர, திரைப்பட இயக்குனர் சமிந்த ஜெயசூரிய மற்றும் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        