மாலைதீவு பறக்கிறார் ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்(anura kumara dissanayake)க மூன்று நாள் பயணமாக அடுத்த மாத இறுதியில் மாலைதீவுக்கு (maldives)செல்லவுள்ளார்.
இருதரப்பு வர்த்தகம் மற்றும் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அவர் இந்தபயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதியாக கடந்த செப்ரெம்பர் மாதம் பொறுப்பேற்ற அநுரகுமார திசாநாயக்க வெளிநாட்டுக்கு மேற்கொள்ளும் ஆறாவது பயணமாக இது இருக்கும்.
ஆறாவது பயணமாகும்
ஏற்கனவே அவர், இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்நாம், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
மாலைதீவின் சுதந்திர தினத்துக்குப் பின்னர் பயணம்
ஜூலை 26ஆம் திகதி கொண்டாடப்படும் மாலைதீவின் சுதந்திர தினத்துக்குப் பின்னர் இந்தப் பயணம் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு பயண ஒழுங்கு பேச்சுக்கள் நடப்பதை உறுதிப்படுத்தியுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்னமும் இந்தப் பயணம் உறுதியாகவில்லை என்றும் கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
