பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கு அதிபர் ரணில் உத்தியோகபூர்வ விஜயம்
அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 03.30 மணி அளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 649 என்ற விமானத்தில் சிறிலங்காவில் இருந்து விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கான விஜயம் ஒன்றிற்காகவும், பிரான்சின் பாரிஸில் நடைபெறவுள்ள புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும் அதிபர் இவ்விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் விஜயம்
இதன்போது, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோனின் அழைப்பின் பேரில் அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரான்சில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உலக சமூகத்தை பாதித்துள்ள பல்வேறு நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பது குறித்து இம்மாநாட்டில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
