குருணாகல் ஆயரை சந்தித்து கலந்துரையாடிய அதிபர்!
Sri Lankan Tamils
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
சந்திப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், இலங்கை இராஜகுரு சபையின் தலைவரும், குருணாகல் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயருமான வண. பிதா கலாநிதி ஹரோல்ட் அந்தோனி பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (02) பிற்பகல் நடைபெற்றது.
குருநாகல் கத்தோலிக்க ஆயர் இல்லத்திற்குச் சென்ற அதிபர் , ஆயரது உடல்நிலை குறித்து கேட்டறிந்த பின்னர், கத்தோலிக்க சமய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில் குருணாகல் கத்தோலிக்க மறைமாவட்ட பதில் ஆயர் வண.பிதா பியல் ஜானக பெர்னாண்டோ மற்றும் குருநாகல் கத்தோலிக்க மறைமாவட்ட பொருளாளர் வண.பிதா சாகர பிரசாந்த ஆகியோருடன் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் கலந்துகொண்டார்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்