இந்தியாவை சென்றடைந்த ரணில் - சற்று முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் (படங்கள்)
புதிய இணைப்பு
இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கரினால் வரவேற்கப்பட்டதோடு இருவரும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்

இரண்டாம் இணைப்பு
இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றடைந்துள்ளார்.
இந்திய சென்றடைந்த ரணில் விக்ரமசிங்கவை இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி. முரளிதரன் வரவேற்றுள்ளார்.
முதாலம் இணைப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், அதிபர் ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக சில நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு புறப்பட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு தொடர்புகளின் 75 ஆண்டு பூர்த்தியையொட்டி இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பரஸ்பர நலன்களை ஆராயவும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர் அதிகாரிகளுடன் அதிபர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், சிரேஷ்ட அரச உத்தியோகத்தரான சாந்தனி விஜேவர்தன, அதபரின் பதில் செயலாளராக இன்று (20) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிபரின் செயலாளர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.