10000 அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு - மன்னிப்புக் கோரியுள்ள ரணில்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனங்களின் ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.
அரசாங்க சுற்றறிக்கைகளுக்கு மாறாக மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டதாக வெளியான அறிக்கையின் அடிப்படையிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
நட்டத்தில் இயங்கும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்க வேண்டாம் என நிதியமைச்சு தெரிவித்திருந்த போதிலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4,200 பணியாளர்கள்
எரிபொருள் விலையேற்றத்தினால் இந்த நிறுவனம் இலாபமடைவதாகக் காட்டி மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் 4,200 பணியாளர்கள் உள்ளதோடு அவர்களுக்கு இரண்டு மாத சம்பளம் மேலதிக கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது.
அதன் உயர் அதிகாரிகளில் 5 இலட்சம் ரூபா மாதச் சம்பளம் பெறும் அதிகாரிகள் இருப்பதால் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு 10 இலட்சம் ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
120 கோடி ரூபா செலவு
பல இலட்சம் பேர் மேலதிக கொடுப்பனவு பெற்றதன் மூலம் 120 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் 5,800 ஊழியர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு செலவிடப்பட்ட தொகை 58 கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாத சம்பளம் தொடர்பான மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் மன்னிப்புக் கோரியுள்ளார்
அரசாங்க சுற்றறிக்கைகளை மீறி மேலதிக கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் அதிபர் இவ்விரு நிறுவனங்கள் சார்பிலும் மன்னிப்புக் கோரியுள்ளதாகவும், சாக்குப்போக்குகளை வழங்கிய பின்னர் அதிபர் இது தொடர்பில் வலுவான தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மேலும் மக்களுக்கு சுமைகளை சுமத்தும் இந்த நிறுவனங்கள் எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் அதிபர் கவலை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
